என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வடமாநில வாலிபர்கள் கைது"
- கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் பகுதியில் காவேரிப்பட்டினம் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
- கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து குட்கா பொருட்களை சேலத்துக்கு கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது
காவேரிப்பட்டினம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் பகுதியில் காவேரிப்பட்டினம் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வேகமாக வந்த காரை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை திறந்து சோதனை செய்தபோது அதில் 515 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தன.
இதனையடுத்து காவேரிப்பட்டினம் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் குட்கா பொருட்களை கடத்தியவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனோ கர்சிங் (வயது 27), மதன்சிங் (19) என்பதும் அவர்கள் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து குட்கா பொருட்களை சேலத்துக்கு கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது விசாரணை செய்து வருகின்றனர். குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்